ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெலுங்கு திரையின் இளவரசனான நடிகர் மகேஷ் பாபு தற்போது நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து, இயக்குநர் கோரடல சிவா இயக்கத்தில் ஸ்ரீமந்துடு என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் நடிகர் மகேஷ் பாபு செய்துள்ள காரியத்தை அறிந்த ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவில் நடைபெறவுள்ள TANA கருத்தரங்கில் நடிகர் மகேஷ் பாபு பங்கெடுப்பதால் அவருக்கு 1.5 கோடி வழங்கப்படும் என கூறப்பட்டது. நடிகர் மகேஷ் பாபு அந்த தொகையினை உடல் நலம் குன்றியுள்ள குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு வழங்க முன்வந்துள்ளார். அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குழந்தைகளின் மறுவாழ்விற்காக இந்த தொகை செலவிடப்பட உள்ளதாம். இதனை அறிந்த ரசிகர்கள் மகேஷ் பாபுவிற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.