ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கமல் நடிக்கும் உத்தம வில்லன் படத்தில் பாடகியாக அறிமுகமாகி இருக்கிறார் ருக்மணி அசோக்குமார். கமலஹாசனுடன் பாடியது ஆஸ்கர் விருது கிடைத்த மாதிரி இருக்கிறது என்கிறார் ருக்மணி.
அவர் மேலும் கூறியதாவது: நான் முறைப்படி கர்நாடக சங்கீதம் படித்திருக்கிறேன். ஹிந்துஸ்தானி படித்து வருகிறேன். சினிமா பாடகியாக வேண்டும் என்பது என் வாழ்நாள் லட்சியம். இதற்கான எனது தேடல் தொடர்ந்தது. ஒரு ஆடியோ விழாவில் இசை அமைப்பாளர் ஜிப்ரானை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். குரலை பதிவு செய்து ஒரு சிடி தாருங்கள் என்றார். நான் தேவா இசையில் பாடிய சாய்பாபா சிடியை கொடுத்தேன். அதை கேட்டுவிட்டு குரல் நன்றாக இருக்கிறது. ஒரு பாடல் தருகிறேன் பாடுங்கள் ஆனால் முக்கியமான ஒருவருக்கு உங்கள் குரல் பிடித்திருந்தால்தான் அது படத்தில் வரும் என்று வாய்ப்பு கொடுத்தார். நானும் பாடிவிட்டு வந்தேன்.
மார்ச் 1ந் தேதி வரை நான் எந்த படத்துக்கு பாடினேன், அந்த பாடல் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்பது எனக்குத் தெரியாது. அப்புறம்தான் நான் பாடியது உத்தமவில்லன் படத்துக்காக என்பதும், அதை ஓகே செய்தவர் கமல் என்பதும், உடன் பாடியிருப்பவரும் அவர்தான் என்பதும் தெரிந்தது. என் வாழ்க்கையில் புதிய லட்சியத்தை அடைந்த விட்ட மாதிரி இருந்தது. கமலை நேரில் சந்தித்து அவரிடம் ஆசியும், வாழ்த்தும் பெற்றுத் திரும்பினேன். படத்தில் வரும் இரணியன் நாடகத்தில் நான் பாடிய பாடல் இடம்பெறுகிறது. கமல் சாரின் ஆசியுடன் தொடர்ந்து சினிமாவில் பாடுவேன் என்கிறார் ருக்மணி அசோக்குமார்.