ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்பதிவாளர் ராஜ்பிரித் எழுதி இயக்கிய படம் அலையோடு விளையாடு. இந்த படத்தில் கருவாப்பையா கார்த்திகா. புதுமுகம் விஜயன் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியது. காட்சிகளும் பிரமிப்பாக மிரட்டியிருந்தார் ராஜ்பிரித். கதை முழுக்க முழுக்க மீனவர்கள் சார்ந்த கதை. படம் திரைக்கு வர ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்த நேரத்தில் ராஜ்பிரித் மாரடைப்பால் இறந்துவிட்டார். அத்தோடு படம் நின்றுவிட்டது. படத்தை தயாரித்தவர் கரூரை சேர்ந்த மதியழகன். இந்த படத்தில் அதிக பணம் போட்டிருப்பதாலும் படம் சிறப்பாக வந்திருப்பதாலும் அலையோடு விளையாடு படத்தை திரைக்கு கொண்டுவர தீவிர முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால் படத்தின் தலைப்பை மட்டும் மாற்றி கதைக்கு பொருத்தமாக செம்மீன் என்று வைத்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் இந்த தலைப்பு உலகளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தை போல தமிழிலும் இந்த செம்மீன் பேசப்படும் என்று நம்புகிறார்கள் யூனிட்டை சேர்ந்தவர்கள்