விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
''நடுநிசி நாய்கள்'', ''நீ தானே என் பொன் வசந்தம்'' என தொடர் தோல்விகளை கொடுத்த கெளதம் மேனனுக்கு அஜித்தின், ''என்னை அறிந்தால்'' படம் புது தெம்பை கொடுத்திருக்கிறது. இதே தெம்புடன் தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாக இறங்கியிருக்கிறார் கெளதம் மேனன். தற்போது சிம்புவை வைத்து ''அச்சம் என்பது மடமையடா'' படத்தை இயக்கி வருபவர், அடுத்தப்படியாக விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் மணிரத்னம் இயக்கியுள்ள ஓ காதல் கண்மணி படத்தை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளார் கெளதம் மேனன்.
இதுகுறித்து தனது டுவிட்டர் வலைபக்கத்தில் கெளதம் மேனன் கூறியிருப்பதாவது, ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் மணி சார் மீண்டும் தனது டிரெண்ட்டை கொண்டு வந்துள்ளார். எனக்கும் இதுபோன்று ஒரு காதல் கதை இயக்க வேண்டும் என தோன்றுகிறது என்று கூறியிருப்பவர், ஓ காதல் கண்மணி படத்தில் நடித்துள்ள துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் நடிப்பையும் பாராட்டியுள்ளார்.