ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெலுங்கு திரையின் இளவரன் மகேஷ் பாபு தற்போது நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஜோடி சேர்ந்து ஸ்ரீமந்துடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள், இயக்குநர் கோரட்லா சிவா இயக்கத்தில், மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மகேஷ் பாபு தனது அடுத்த படத்தின் வேலைகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். ப்ரமொட்ஷவம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை இயக்க, இயக்குநர் ஸ்ரீகாந்த் அட்டலா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு மூன்று நாயகிகளாம். அதில் ஒருவர் நடிகை சமந்தா என கூறபடுகின்றது. இந்த தகவல் உறுதிப்படுதபட்டால் இப்படத்தின் மூலம் மகேஷ் பாபு - சமந்தா ஜோடி மூன்றாவது முறையாக இணைவர். குடு, சீதம்மா வைகிட்லோ சிரிமள்ளே செட்டு என இரண்டு படத்தில் ஏற்கனவே மகஷ் பாபு சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் மற்றொரு நாயகியாக நடிக்க நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கிடமும் பேச்சு வார்த்தை நடப்பதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.