சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
மணிரத்னம் இயக்கி உள்ள ஓ காதல் கண்மணி படம் வருகிற 17ந் தேதி வெளிவர இருக்கிறது. இதில் துல்கர் சல்மான், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகும் சூழ்நிலையில் விநியோகஸ்தர் மன்னன் என்பவர் தயாரிப்பாளர் சங்கத்தில் படத்துக்கு எதிரா புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த கடல் படத்தை வாங்கி வெளியிட்டேன். இதில் எனக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டது. அதற்காக வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்டி வருகிறேன். தற்போது பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய அளவில் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நஷ்டஈடு வழங்கி வருகிறது. அதேபோன்று எனக்கும் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு நஷ்டஈடு பெற்றுத் தரவேண்டும். ஓ காதல் கண்மணி படத்தின் வெளியீட்டுக்கு முன்பு எனக்கு நஷ்டஈடு பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு தன் மனுவில் மன்னன் கூறியுள்ளார்.