ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கவிஞர் மதன் கார்க்கி நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் தமிழ் சினிமாவில் எழுதியுள்ளார். இதில் பல பாடல்கள் வெற்றியும் பெற்றுள்ளது இந்நிலையில் முதல் முறையாக கராத்தேக்காரன் என்ற படத்துக்கு பாடல்கள் எழுதி மூன்று மொழிகளில் வசனம் எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலம், வியட்நாம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பைட் மாஸ்டராக இருந்த ஸ்டண்ட் சிவா இயக்குகிறார். இதுபற்றி மதன் கார்க்கியிடம் கேட்டபோது ஒரு படத்துக்கு வசனம் ரொம்பவும் முக்கியம் நீளமான வசனங்கள் இருந்தால் ரசிக்கமாட்டார்கள். அதே நேரத்தில் தேவையான இடத்தில் சரியான வசனம் இருந்தால் படத்திற்கு பலமாக இருக்கும். படத்திற்கு எனக்கு தெரிந்த வரை சிறப்பாக எழுதிக்கொடுத்திருக்கிறேன் நல்ல கதையாக இருந்தால் தொடர்ந்து எழுதுவேன் என்கிறார் கார்க்கி.