ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சென்னையில் தென்னிந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சினிமா மற்றும் தொலைக்காட்சியில் டப்பிங் பேசும் கலைஞர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சம்பளத்தை வாங்கிக் கொடுப்பது டப்பிங் யூனியன்தான். அப்படி கொடுக்கும்போது அதில் 10 சதவிகிதத்தை சங்கம் பிடித்தம் செய்து கொள்கிறது.
இதனை எதிர்த்து ஜெ.மதியழகன், ஆர்.மகாலட்சுமி, பி.ஆர்.கண்ணன் என்கிற டப்பிங் கலைஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் "எங்கள் சங்கத்தில் 1608 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் 10 சதவிகித்தை யூனியன் பிடித்துக் கொள்கிறது. இது கடந்த 2014ம் ஆண்டுமுதல் நடந்து வருகிறது. சங்கத்தின் துணை விதியின் படி இப்படி சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக கூறினார்கள். அப்படி எந்த துணை விதியும் இல்லை என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அறிந்திருக்கிறோம்.
டப்பிங் கலைஞர்களுக்கான சம்பளத்தை பெரும் தொகையாக வசூலித்து விட்டு சிறு தொகையையே கலைஞர்களுக்கு தருகிறார்கள். பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு ரசீதும் வழங்கப்படுவது இல்லை. இது குறித்து தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் புகார் அளித்தோம். அவரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. எனவே டப்பிங் கலைஞர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதற்கு தடைவிதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், டப்பிங் கலைஞர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்வதற்கு இடைக்கால தடை விதித்தோடு வருகிற 8ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய டப்பிங் யூனியனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.