ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ரட்சகன், ஜோடி, ஸ்டார், துள்ளல் போன்ற படங்களை இயக்கியவர் பிரவீன் காந்த், நீண்ட இடைவௌிக்கு பிறகு புலிப்பார்வை என்ற படத்தை இயக்கினார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது. இந்நிலையில் இந்தப்படத்திற்கு பிறகு அடுத்தப்படியாக புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.
இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்-அப்பில் மூழ்கி கிடக்கின்றனர். அதனால் இதை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். படத்திற்கு வாட்ஸ்-அப் என்று பெயர் வைத்துள்ளார். இன்றைய டிரண்ட் என்ன என்பதை புரிந்து கொண்டு இப்படியொரு தலைப்பு வைத்திருக்கிறார் பிரவீன். படத்தில் காதலையும், காதல் சார்ந்த விஷயங்களையும் சொல்ல போகிறாராம் பிரவீன்.
புதுமுகங்களோடு பிரகாஷ்ராஜ், தம்பி ராமைய்யா, தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் படமாக்க திட்டமிட்டிருக்கிறார். மே மாதம் முதல் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது.