ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கொஞ்ச நாட்கள் பீல்டிலேயே ஆளை பார்க்க முடியாத அளவுக்கு கடந்த இரண்டு வருடங்களாக அப்ஸ்கான்ட் ஆகியிருந்தார் நித்யா மேனன். ஆனால் இந்த வருட துவக்கத்திலேயே தெலுங்கில் அவர் நடித்த 'மல்லி மல்லி இதி ராணி ரோஜு' படம் மூலம் தனது முதல் என்ட்ரியை பிப்-6ஆம் தேதி துவக்கினார். மார்ச்-6ல் சேரன் இயக்கத்தில் நித்யா நடித்த 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை'ரிலீஸானது. அதன்பின் கடந்த மார்ச்-2௦ஆம் தேதி மலையாளத்தில் இவர் நடித்த '1௦௦ டேய்ஸ் ஆப் லவ்' படம் வெளியானது.
இதோ, வரும் ஏப்ரல்-1௦ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள 'ஓ காதல் கண்மணி' ரிலீஸாக இருக்கிறது. இதில் முதல் இரண்டு படங்களில் சர்வானந்த்துக்கு ஜோடியாகவும் அடுத்த இரண்டு படங்களில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. அந்த வகையில் 25 நாட்களில் 3 படம் வெளியான நடிகை என்கிற புதிய சாதனை படைக்கவுள்ளார் நித்யா மேனன். இதன் மூலம் லட்சுமிராயின் 2௦ நாட்களில் 3 படம் என்கிற சாதனையை முறியடிக்காமல் அவருக்கு அடுத்த இடத்தில் பின்தொடர்கிறார் நித்யா மேனன்.