ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நடராஜன் சதுரங்கவேட்டை படத்துக்கு பிறகு கதம் கதம் என்ற படத்தில் நடித்தார் பெரிய அளவில் படம் பேசப்படவில்லை. இந்நிலையில் புலி படத்துக்கு ஒளிப்பதிவில் பிஸியாக இருக்கிறார். இருந்த போதும் நம் இயக்குனர்கள் நட்டியை பெரிய நடிகராக்கிவிட வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளனர். உத்தம மகாராசா என்ற படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். இது பற்றி நட்டியிடம் கேட்டால் தமிழில் வருஷத்துக்கு இரண்டும் படம் மட்டுமே செய்வேன். இதில் என் கேமரா வேலைக்கு இடையூறு இல்லாமல் பார்த்து கொள்வேன். அதே நேரத்தில் பாலிவுட்டில் ஒளிப்பதிவு செய்தாலும் நடிக்க கூப்பிட்டால் நடிக்க மாட்டேன். காரணம் தமிழ் உலகம் வேறு பாலிவுட் உலகம் வேறு. இங்கே நம் வாழ்வியல் சார்ந்து படம் எடுப்போம். அங்கே அது இருக்காது என்கிறார் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி.