ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஸ்வரூபம் படத்தை அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார் கமல். ஆனால் அந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த பிறகும் அப்படத்தை தயாரித்துள்ள ஆஸ்கர் பிலிம்ஸ் படத்தை வெளியிடாமல் வைத்திருக்கிறது. இதுபற்றி இதற்கு முன்பு காரசாரமாக எதுவும் சொல்லாமல இருந்த கமல், சமீபத்தில் நடந்த பிரஸ்மீட்டில், விஸ்வரூபம்-2 படத்தை எதற்காக வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள் என்று எனக்கே இன்னும் தெரியவில்லை என்று கூறினார்.
மேலும், உத்தமவில்லன் படத்தை ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் தொடங்கினோம். அந்த கதையை ரெடி பண்ணிவிட்டு ரமேஷ் அரவிந்தை இயக்கும்படி சொன்னேன். அதோடு எனது குருநாதர் கே.பாலசந்தர் அவர்களை எப்படியாவது ஒரு வேடத்தில் நடிக்க வைத்து விடவேண்டும் என்று கதை எழுதும்போதே திட்டமிட்டிருந்தேன். அதன்படி அவரையும் நடிக்க வைத்தேன். அந்த வகையில், என்னை சினிமாவில் ஆளாக்கியவரை என் படத்தில் நடிக்க வைத்த பெருமை எனக்கு கிடைத்தது.
இதேபோல், சினிமாவில், சிறுவனாக நடிக்கத் தொடங்கியபோது சிவாஜி அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவன் நான். அவரது மடியில் அமரும் பாக்கியம் பெற்ற நான், பின்னர் அவருடன் தேவர் மகன் படத்தில் நடித்தேன். எனக்கு அப்பாவாக அவர் நடித்து என்னை பெருமைப்படுத்தினார். அந்த வகையில், எனது சினிமா பயணத்தில் சிவாஜிகணேசனுடன் நான் நடித்த தேவர்மகனும், கே.பாலசந்தருடன் நான் நடித்த உத்தமவில்லனும் எனக்கு முக்கியமான படங்களாகி விட்டன என்றார் கமல்.