ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ் சினிமாவில் கவுண்டமணி-செந்திலின் காமெடி கூட்டணி நீண்ட காலம் வெற்றிக்கூட்டணியாக திகழ்ந்தது. அவர்கள் நடித்த படங்களென்றால் காமெடிக்கு நூறு சதவிகிதம் கியாரண்டி இருந்தது. அதனால் அவர்கள் நடித்து வந்தபோது அவர்களது காமெடி ட்ராக்கை எழுதுவதற்கென்றே காமெடி ரைட்டர்களும் இருந்தனர்.
அதன்காரணமாக, கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரை தமிழக சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த அவர்கள், வடிவேலுவின் வளர்ச்சிக்குப்பிறகு படவாய்ப்புகள் குறைந்ததால் அவ்வப்போது ஒரு படத்தில் தலைகாட்டி வந்தனர். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இருவரையும் எந்த படங்களிலும் காண முடியாதநிலை இருந்தது.
ஆனால் 49 ஓ படத்தில் திடீரென்று கவுண்டமணி ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அதையடுத்தும் சில படங்களில் அவர் நடித்து வருகிறார். அதைப்பார்த்து. இனிமேல் நடிப்பே வேண்டாம் என்று இருந்து வந்த செந்திலுக்கும் இப்போது நடிப்பு ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதனால் கள்ளப்படம் என்ற படததில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர், இப்போது நதிகள் நனைவதில்லை படததிலும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.