ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நாகர்ஜூனா - கார்த்தி இணையும் படத்தின் சூட்டிங்கை, நடிகர் சிவக்குமார் கிளாப் அடித்து இன்று ( மார்ச் 15ம் தேதி) துவக்கி வைத்தார்.
தற்போது மல்டி ஸ்டார் படங்கள், பரவலாக எல்லா மொழிகளில் வர துவங்கிவிட்டன. தமிழில், ஆர்யா-விஷால் நடிப்பில் அவன் இவன், அஜீத்-ஆர்யா நடிப்பில் ஆரம்பம் என பல படங்களை உதாரணமாக சொல்லலாம்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் தயாராகும் படம் ஒன்றில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவும், நம்மூர் நடிகர் கார்த்தியும் இணைந்து நடிக்க உள்ளனர் கார்த்தி நடித்த சில படங்கள் தமிழிலிருந்து, தெலுங்குக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளதால் அவரைப் பற்றிய பரிச்சயம் தெலுங்கு ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது. எனவே அவரை இப்படத்திற்கு ஓ.கே. செய்துவிட்டனர். இப்படத்தை, வம்சி பைடிபாலி இயக்குகிறார்.இதனை இப்படத்தை தயாரிக்கும் பிவிபி சினிமாஸ் உறுதி செய்துள்ளது.
இப்படத்தின் தெலுங்கு பதிப்பை, பிப்ரவரி மாதத்தில் பிவிஆர்., ஸ்டூடியோவில் நடந்த இதன் பூஜையில், நாகர்ஜூனாவின் மனைவியும், நடிகையுமான அமலா, முதல்ஷாட்டை கிளாப் அடித்து துவக்கி வைத்தார். படத்திற்கான தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. உஸ்தாத் ஹோட்டல்,பெங்களூர் டேஸ் ஆகிய படங்களுக்கு இசை அமைத்த கோபி சுந்தர் இந்த படத்துக்கும் இசை அமைக்கிறார்.தன்னுடைய பிரத்யேக கைவண்ணத்தால் ஒளிப்பதிவு துறையில் பெரும் பெயர் பெற்ற ஒளிப்பதிவாளர் பி .எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.விரைவில் படம் பற்றிய தலைப்பு மற்றும் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாக இருக்கிறது.