ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பார்த்திபன் இயக்கி நாயகனாக நடித்த முதல் படம் புதிய பாதை. அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் அதன்பிறகு பொண்டாட்டி தேவை, தாலாட்டு பாடவா, தையல்காரன், சுகமான சுமைகள், உள்ளே வெளியே, புள்ளக்குட்டிக்காரன், ஹவுஸ்புல், வித்தகன் என பல படங்களை இயக்கி நடித்தார் பார்த்திபன். அதன்பிறகு மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், கதை திரைக்கதை இயக்கம் படத்தில் வெறும் இயக்குனராக மட்டுமே செயல்பட்டவர், அடுத்து கதை இருக்கு என்ற படத்தையும் முழுக்க முழுக்க மற்றவர்களைக்கொண்டே இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். ஆனால், இப்போது இயக்குனராக மட்டுமே செயல்படும் பார்த்திபன், தனது முதல் படமான புதிய பாதையிலும் தான் இயக்குனராக மட்டும்தான் செயல்பட இருந்தாராம். அந்த படத்தில் நடிப்பதற்காக தற்போது கமலின் உத்தமவில்லன் படத்தை இயக்கியுள்ள நடிகர் ரமேஷ்அரவிந்திடம்தான் கால்சீட் கேட்டிருந்தாராம். ஆனால், அப்போது மனதில் உறுதி வேண்டும், கேளடி கண்மணி என ரமேஷ்அரவிந்த் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நேரம் என்பதால் அவர் கேட்ட சம்பளம், பார்த்திபன் போட்டு வைத்திருந்த பட்ஜெட்டை எகிறி சென்றதாம். அதன்காரணமாகத்தான் புதிய பாதையில் தானே ஹீரோவாகியிருக்கிறார் பார்த்திபன். உத்தமவில்லன் படத்தின் ஆடியோ விழாவை தொகுத்து வழங்கியபோது, ரமேஷ்அரவிந்த் முன்னிலையில் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார் பார்த்திபன்.