ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அங்காடித்தெரு மகேஷ் - நாடோடிகள் அனன்யா நடித்த படம் இரவும் பகலும் வரும். இரவும் பகலும் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட படம் இது. அந்த தலைப்பில் ஏற்கனவே ஒரு படம் வெளியாகி உள்ளது. ஜெய்சங்கர் நடிப்பில் 1965ல் வெளியான படம். அதே தலைப்பில் படம் எடுத்தால் ஏற்கனவே அந்த தலைப்பில் படம் எடுத்த தயாரிப்பாளர்களிடம் அனுமதி வாங்க வேண்டும். அந்த அனுமதியை தற்போது படம் எடுப்பவர்கள் வாங்க வில்லை. எனவே இரவும் பகலும் வரம் என்று படத்தின் பெயர் மாற்றப்பட்டது.
பாலா ஸ்ரீராம் என்ற புதுமுக இயக்குநர் இயக்கிய இப்படத்தை ஸ்கை டாட் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. அதை தணிகைவேல் என்பவர் வாங்கி வெளியிட இருந்தார். இரவும் பகலும் வரும் திரைப்படம் இன்று வெளிவருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் படம் வெளிவரவில்லை. மார்ச் 13 வெளியாகும் என சொல்லப்பட்டிருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஏற்கனவே ஒரு படம் எடுத்து ரிலீஸ் செய்த வகையில் விநியோகஸ்தர்களுக்கு 10 லட்சம் பணம் தர வேண்டுமாம். இந்த பஞ்சாயத்தில்தான் படம் வெளிவரவில்லையாம்.