ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'பாண்டிய நாடு' வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன், விஷால் மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதக் கடைசியிலேயே ஐதராபாத்தில் ஆரம்பமாவதாக இருந்தது. ஆனால், படத்தின் மொத்த ஸ்கிரிப்ட்டையும் கொடுத்த பிறகுதான் படப்பிடிப்புக்குப் போக வேண்டும் என விஷால், சுசீந்திரனிடம் சொன்னதாகத் தெரிகிறது. அதனால்தான் படப்பிடிப்பு ஒரு மாத காலம் தாதமாக ஆரம்பமாவதாகச் சொல்கிறார்கள்.
இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். இப்படத்தில் முதலில் லட்சுமி மேனன் விஷால் ஜோடியாக மீண்டும் நடிக்க உள்ளதாக பேசப்பட்டது. அதன் பின் காஜல் அகர்வால்தான் படத்தின் ஹீரோயின் என்று அறிவித்தார்கள். படத்திற்கு இமான் இசையமைக்கிறார். விஷால் நடித்து அடுத்தடுத்து வெளிவந்த 'நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள' ஆகிய படங்களின் வெற்றியை 'பாண்டிய நாடு' படத்தின் வெற்றியுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகவே இருந்ததால் இந்த புதிய படத்தில் மிகவும் கவனமாக இருக்கிறாராம்.
'பாண்டிய நாடு' படத்திற்கு முன்னர் விஷால் நடித்து வெளிவந்த 'பட்டத்து யானை, சமர், வெடி' ஆகிய படங்களும் கூட தோல்விப் படங்களாகவே அமைந்தன. 'பாண்டிய நாடு' படம்தான் விஷால் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. சுசீந்திரன் இயக்கத்தில் இன்று ஆரம்பமாகும் படத்தைத் தொடர்ந்து மே மாதம் லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' படத்தில் விஷால் நடிக்க உள்ளார்.