ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'த்ரிஷ்யம்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், தமிழில் தற்போது அதன் ரீமேக்காக கமலை வைத்து இயக்கிவரும் 'பாபநாசம்' படத்தை முடித்துவிட்டு மீண்டும் மலையாளத்தில் 'லைஃப் ஆப் ஜோஸுட்டி' என்ற படத்தை இயக்குகிறார் என்பது தெரிந்த செய்திதான்.. ஏற்கனவே 'மை பாஸ்' என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோதே அடுத்தடுத்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என முடிவு செய்திருந்தார்கள்.. அதன்பின் 'த்ரிஷ்யம்' ஹிட் மூலமாக உலக நாயகன் கமலை வைத்து இயக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாலும் கூட, ஏற்கனவே கொடுத்த வாக்குப்படி திலீப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறார் ஜீத்து ஜோசப்.
இந்தப்படத்தில் ஜோஸுட்டி என்கிற மனிதனின் முப்பது வருட வாழ்க்கையைத்தான் கதையாக மாற்றியிருக்கிறார்கள். இடுக்கி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து, அங்கேயே திருமணமும் செய்துகொண்டு, பின்னாளில் நியூசிலாந்துக்கு பயணமாகும் அளவுக்கு டெவலப் ஆகிறார் திலீப். ஆனால் அங்கே வெவ்வேறு சூழலில் இன்னும் இரண்டு பெண்கள் அவரது வாழ்கையில் குறுக்கிடுகிறார்கள். அது அவரது வாழ்க்கை பயணத்தில் என்னவிதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. ஜோதி கிருஷ்ணா மற்றும் ரக்சனா நாராயணமூர்த்தி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, இன்னொரு கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை..