ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர், கதாசிரியர், இயக்குனர் என பன்மொழி திறமைகளை கொண்டவர் பிரபல மலையாள நடிகர் சீனிவாசன். நடிகர் என்றால் அதில் காமெடி, குணச்சித்திரம், வில்லன் என வெரைட்டி காட்டுபவர். தமிழில் 'லேசா லேசா' என்கிற ஒரே படத்தில் மட்டும் ஷாம் வீட்டு வேலையாளாக லேசாக தலைகாட்டியதோடு சரி.. நடிப்பு போக இவருக்கு பிடித்தமானது விவசாயம் தான். அதிலும் ரசாயன உரங்களுக்கு எதிரான மனோபாவம் கொண்ட இவர் இயற்கை விவசாய ஆர்வலர்.
அதனால் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தற்போது தனியாக ஒரு பண்ணையை உருவாக்கி அங்குள்ள நிலத்தில் இயற்கை சார்ந்து விவசாயம் செய்கிறார். நெல்லை விளைவிப்பதில் உள்ள அரசியலை கூட புட்டுபுட்டு வைக்கிறார் சீனிவாசன். ஆரம்பத்தில் இவருக்கு உதவியாக இருந்தது இயற்கை விவசாயம் குறித்த புத்தகங்கள் தானாம். அதன் பின் விவசாய அதிகாரிகளும் பொதுமக்களும் கூட இவரது முயற்சிக்கு ஒத்துழைப்பு தர ஆரம்பித்துவிட்டார்களாம்.