ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நீண்ட இடைவெளிக்கு பிறகு ரொம்ப நல்லவண்டா நீ படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார் சோனா. வில்லித்தனமான கவுன்சிலர் வேடத்தில் நடிக்கிறார். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் அப்பாவி மிர்சி செந்திலை வைத்துக் கொண்டு சோனா ஆடும் ஆட்டம் காமெடியாக இருக்குமாம். ரீ என்ட்ரி பற்றி கேட்டதற்கு சோனா கூறியதாவது:
தமிழ் சினிமாவில் அறிமுகமானேன். ஹீரோயினாக நடித்தேன், கிளாமராக நடித்தேன், ஒரு பாட்டுக்கு ஆடினேன், படம் தயாரித்தேன். ஆனாலும் தமிழ் சினிமா என் திறமையை பயன்படுத்திக் கொள்ளவில்லை. கவர்ச்சி கேரக்டருக்கும், ஒரு பாட்டுக்கு ஆடவுமே வாய்ப்புகள் வந்தது. ஆனால் மலையாள சினிமா என் திறமைக்கு தீனி போடுகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 8 படங்களில் நடித்திருக்கிறேன். ப்ரியதர்ஷன் சார் இயக்கிய ஆமையும் முயலும் படம் எனக்கு பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. இப்போது 5 படங்களில் நடித்து வருகிறேன்.
தமிழில் இனி ஒரு பாட்டுக்கு ஆடுவதில்லை என்று முடிவு செய்து விட்டேன். அதில் உறுதியாக இருக்கிறேன். நல்ல கேரக்டர்கள் வந்தால் மட்டுமே நடிப்பது என்பதிலும் உறுதியாக இருந்தால்தான் சின்ன கேப் விழுந்து விட்டது. ரொம்ப நல்லவண்டா நீ படத்தில் கவுன்சிலராக நடிக்கிறேன். சகுணி படத்தில் ராதிகா மேடம் நடித்திருந்ததை இன்ஸ்பிரஷனாக எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறேன். இந்த படத்துக்கு பிறகாவது நல்ல கேரக்டர் ரோல்கள் கிடைக்கும் என்று நம்புறேன் என்கிறார் சோனா.