ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தனுஷ் தயாரிப்பில் விஜயசேதுபதி-நயன்தாரா நடித்து வரும் நானும் ரெளடிதான் படத்தின் படப்பிடிப்பு முதல் இரண்டுகட்டமாக பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் மட்டுமே சில தினங்கள் விஜயசேதுபதியுடன் ரொமான்ஸ் செய்தபடி நடித்த நயன்தாரா, பின்னர் கால்சீட் இல்லை என்று அங்கிருந்தபடியே தெலுங்கு படத்தில் நடிக்க ஐதராபாத்துக்கு எஸ்கேப்பாகி விட்டார்.
அதையடுத்து, விஜயசேதுபதி ரெளடிகளுடன் ஆவேசமாக மோதிக்கொள்ளும் இரண்டு சண்டை காட்சிகளை படமாக்கி விட்டு சென்னை திரும்பினர். அப்போது படத்தில் மெயின் வில்லனாக நடிக்கும் ஆனந்தராஜின் காட்சிகளும் பெருவாரியாக படமாக்கினார்களாம். ஆக, மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாம். அடுத்தபடியாக விஜயசேதுபதி-நயன்தாரா சம்பந்தப்பட்ட நெருக்கமான காட்சிகள்தான் அதிகமாக படமாக்கப்படவேண்டியுள்ளதாம். ஆனால், நயன்தாரா தெலுங்கு படத்தில் நடிக்க சென்று விட்டதால், இப்போது விஜயசேதுபதியும் வேறு படத்தில் நடிக்க முடியாமல் அவரது வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது விஜயசேதுபதிக்காக பல படங்கள் கியூவில் நிற்கின்றன. இருப்பினும், விஜயசேதுபதிக்கு நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை. தனுசுக்கு அவர் மர்க்கெட்டில் இருக்கும் நடிகை படத்தின் வியாபாரத்துக்கு உதவக்கூடியவர் என்கிற இரண்டு காரணங்களால் இப்போது நயன்தாராவுக்காக காத்துக்கொண்டிருக்கிறது நானும் ரெளடிதான் டீம்.