ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு தரக்கோரி அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மெகா பிச்சை போராட்டத்துக்குப்பிறகு பிரச்சினை இன்னும் சூடு பிடித்தது. அதோடு, முதலில் சிறிய தொகையை நஷ்ட ஈடாக தருவதாக சொன்ன ரஜினிதரப்பு பின்னர் அதிக தொகை தர முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. நடிகர் சங்கத்தலைவரான சரதகுமார் இந்த விவகாரத்தில் தலையிட்டு சமூக தீர்வுக்கான பேச்சுவார்தையிலும் ஈடுபட்டிருந்தார். இந்தநிலையில், லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் சார்பில், லிங்கா படம் பற்றியோ, ரஜினி பற்றியோ யாரும் எதுவும் பேசக்கூடாது என்று கர்நாடக நீதிமன்றத்தில் தடை வாங்கி விட்டனர். அதுமட்டுமின்றி, முக்கியமான ஊடகங்களும் லிங்கா பற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது என்றும் தடை வாங்கியிருக்கிறார்கள். இதனால், அடுத்து லிங்கா படம் சம்பந்தமாக சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவர்கள் எதுவும் பேச முடியாமல் பின்வாங்கிவிட்டனர். இதையடுத்து, இந்த விசயத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல லிங்கா படத்தினால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் முடிவெடுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.