கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கிய கில்லாடி, சண்டமாருதம் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தது. வருகிற 6ந் தேதி ரொம்ப நல்லவன்டா நீ படம் வெளிவருகிறது. 35 நாட்களுக்குள் மூன்று படங்கள் ரிலீஸ் செய்த ஒரே இயக்குனார் நான்தான் என்று பெருமை பொங்க கூறுகிறார் ஏ.வெங்கடேஷ்
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: என்னோட சினிமா கேரியரில் இது முக்கியமான தருணம். சண்டமாருதம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான்கு வருடங்கள் கிடப்பில் கிடந்த கில்லாடி ரிலீசானது. புதிய காமெடி முயற்சியான ரொம்ப நல்லவன்டா நீ வருகிற 6ந் தேதி ரிலீசாகிறது. ஒரே இயக்குனரின் 3 படம் 35 நாட்களுக்குள் ரிலீசாவது அரிதான ஒன்று என்கிறார்கள். உலகிலேயே இது நடக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். இது யதேச்சையாக நடந்திருந்தாலும் கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.