மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! |
சித்தார்த் நடிகர் என்றபோதும் அவருக்குள்ளும் ஒரு டைரக்டர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார். பாய்ஸ் படத்தில் அவர் எதிர்பாராதவிதமாக நடிகராக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பிருந்தே இயக்குனராக வேண்டும் என்பதுதான் சித்தார்த்தின் கனவாக இருந்தது. அதனால்தான் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றார். ஆனால், நடிகராகி விட்டதால் பின்னர் அவரால் தனது இயக்குனர் கனவை நனவாக்க முடியவில்லை. இருப்பினும் அந்த இயக்குனர் அவ்வப்போது தலைதூக்கும்போது தனக்கு தோன்றும் ஐடியாக்களையும் தன்னை வைத்து படம் இயக்கும் டைரக்டர்களிடம் வெளிப்படுத்துவார். இந்த குணம் சித்தார்த்திடம் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்தநிலையில், தற்போது கன்னட லூசியா படத்தின் தமிழ் ரீமேக்கான எனக்குள் ஒருவன் படத்தில் இரண்டு மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்துள்ள சித்தார்த், ஏற்கனவே கன்னடத்தில் ஒரு நடிகர் அந்த கதாபாத்திரங்களில் நடித்திருப்பதால் அதன் சாயல் தனது நடிப்பில் வந்து விடக்கூடாது என்பதற்காக, இரண்டு கேரக்டர்களிலும் தனித்தனியே நடித்தவர், டைரக்டர் சொன்னதுபோக தனக்கு தோன்றிய புதிய விசயங்களையும் கலந்தே நடித்திருக்கிறார்.
அந்த வகையில், இதுவரை நான் நடித்த படங்களை விட இந்த எனக்குள் ஒருவன் படத்துக்காக கூடுதல் உழைப்பை போட்டிருக்கிறேன். அதனால் இதற்கு பெரிய பலன் கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார் சித்தார்த்.