ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நல்ல சினிமா ஒன்றிலாவது நடிக்க வேண்டும் என்ற எனது லட்சியம் நிறைவேறியதும் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை பாவனா கூறியிருக்கிறார். அஜித்துடன் அசல் படத்தில் நடித்த பாவனாவுக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர் இப்போது கன்னடப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பாவனா அளித்துள்ள பேட்டியொன்றில் "சினிமாவுக்கு வந்து நிறைய ஆண்டுகள் கடந்து விட்டது. இன்னும் வெளியில் சொல்லிக் கொள்கிற மாதிரி ஒரு சினிமாவிலும் நடிக்கவில்லை. இந்த ஒரு விஷயம் மனசை உறுத்திக் கொண்டே இருக்கிறது. என்னுடன் வந்தவர்கள் பலர் இரண்டு, மூன்று நல்ல சினிமாக்களில் நடித்து பெயர் வாங்கி விட்டார்கள். எனக்கு மட்டும் இன்னும் நல்ல சினிமா வரவில்லை. கதைகள் தேர்வில் கவனம் வைத்துதான் இருக்கிறேன். பெரிதாக கவர்ச்சி மோகத்தை மூட்டி யாரையும் கவரவும் இல்லை. எனக்கென கதை கொண்டு வருபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதைப் போல் நடித்து தருகிறேன். இன்னும் காத்திருப்பேன். நல்ல சினிமாவுக்கு. திருமணம் செய்து என்ன செய்யப் போகிறேன். இப்போதைக்கு வேண்டும் ஒரு நல்ல சினிமா. அதுதான் என் லட்சியம். அந்த லட்சியம் நிறைவேறி விட்டால் அப்புறம் என்ன திருமணம்தான் என்று கூறியிருக்கிறார். நல்ல லட்சியம்தான்!