ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இயக்குனர் சத்யன் அந்திக்காடும், மோகன்லாலும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றால் அது மோகன்லாலின் ஆக்சன் முகமூடியை எல்லாம் கழட்டி வைத்துவிட்டு, மோகன்லாலின் இன்னொரு பரிமாணத்தை காட்டுவதாக இருக்கும்.. இதற்கு நான்கு வருடங்களுக்கு முன் இவர்களது கூட்டணியில் உருவாகிய 'சினேக வீடு' திரைப்படம் ஒன்று போதும் சாம்பிளுக்கு. தற்போது இவர்களின் கூட்டணியில் 'என்னும் எப்பொழும்' எகிற படம் தயாராகி வருகிறது. இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகும் 15வது படம் இது.
இந்த 25 வருடங்களில், பதினைந்து படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பயணிக்க காரணம் இருவருக்குமான புரிதலும் விட்டுக்கொடுத்தலும் தான். சமீபத்தில் காதலர் தினத்தின்போத ஆதரவற்ற சிறுவர்களின் இல்லத்துக்கு சென்று அங்குள்ள குழந்தைகளிடம் தனது அன்பை வெளிப்படுத்தினார் மோகன்லால். அதேபோல அன்பின் அடிப்படையால் உருவான அந்த தினத்தில் அவரது ஆத்மார்த்தமான நண்பர்களையும் நினைத்து அவரது மனம் உலா வந்திருக்கிறது.
குறிப்பாக இயக்குனர் சத்யன் அந்திகாடு பற்றிய நினைவுகள் அவரை நெகிழ செய்துவிட்டனவாம். “இதுவரை எனக்கு கடினமான தருணங்கள் வந்தபோதெல்லாம் சத்யன் அந்திக்காடு என் கூடவே நின்றிருக்கிறார்.. நான் சில விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் போராடும்போது அவர் எனக்கு வழிகாட்டியுள்ளார். அவர் எனக்கு சகோதரரை போன்றவர். எங்கள் குடும்பத்தில் ஒருவர்” என தனது வலைப்பக்கத்தில் நெகிழ்ந்திருக்கிறார் மோகன்லால்.