ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
3 படத்தில் அனிருத் இசையில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை எழுதி பின்னணியும் பாடி அந்த பாடலில் தானே நடித்திருந்தார் தனுஷ். அதற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதனால் அதையடுத்து, தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் பாடல் எழுதி பின்னணி பாடுவதை தொடர்ந்து வருகிறார் தனுஷ்.
அந்த வகையில், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தான் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் மொத்த பாடல்களையும் எழுதிய தனுஷ், அப்படத்தில் பாடிய அம்மா அம்மா, வாட் ய கருவாட் ஆகிய பாடல்கள் மெகா ஹிட்டானது. அதையடுத்து, இப்போது அனேகன் படத்திலும் மரண கானா விஜியுடன் இணைந்து தனுஷ் பாடியுள்ள டங்கா மாரி ஊதாரி பாடலும் மெகா ஹிட்டாகியிருக்கிறது.
அதனால் இப்போது தனுஷ் பாடிய பாடல்களின் ஆடியோ ரைட்சுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறதாம். அதன்காரணமாக, மாரி படத்தைத் தொடர்ந்து மீண்டும் வேல்ராஜ் இயக்கும் படத்திலும் முழுப்பாடல்களையும் தானே எழுதுகிறாராம் தனுஷ். அதனால் மாரி படத்தின் பாடல் பதிவு முடித்து விட்ட அனிருத், அடுத்து வேல்ராஜ் இயக்கும் படத்திற்கான பாடல் கம்போஸ் வேலைகளில் தற்போது இறங்கி விட்டார். அதனால் படப்பிடிப்பில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் தனுஷ். ஓய்வு கிடைக்கும்போது, அந்த டியூன்களை ஏதாவது மரத்தடியில் அமர்ந்து கேட்டபடி பாடல்களை எழுதிக்கொண்டிருக்கிறாராம்.