இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
கடந்த வருடம் தமிழில் வெளியாகிய த்ரில்லர் படமான 'தெகிடி'யில் நடித்த ஜனனி ஐயருக்கு தமிழில் படம் இல்லாவிட்டாலும் மலையாளத்தில் பிஸியாகத்தான் நடித்துக்கொண்டு இருக்கிறார். தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாக இருக்கும் சைக்கோ த்ரில்லர் படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. படத்தின் பெயர் 'ம-சு-க'. என்னடா சீன மொழியில் டைட்டில் வைத்து விட்டார்களோ என குழம்ப வேண்டாம். மஞ்சள்-சுவப்பு-கருப்பு என்கிற வார்த்தைகளின் சுருக்கம் தான் அது. தவிர ம-சு-க என்றால் பிரேசில் மொழியில் 'மிகுந்த வலி' என்கிற அர்த்தமும் இருக்கிறதாம்.
பசுபதி மற்றும் பிரதாப் போத்தன் இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். பசுபதி ஏற்கனவே மலையாளத்தில் 'பிக் பி', 'நம்பர் 22 மதுரா பஸ்' உட்பட நான்கு படங்களில் நடித்திருக்கிறார். ஜனனி பத்திரிகையாளராகவும், பசுபதி லாயராகவும், பிரதாப் போத்தன் ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியாகவும் நடிக்க இருக்கிறார்கள். ஒரு பேட்டிக்காக பிரதாப் போத்தனை சந்திக்க மூணாறு செல்லும் ஜனனி ஐயர், அங்கே பசுபதியை சந்திக்கிறார். அதை தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் சீட் நுனிக்கு வரவைக்கும்படி இருக்குமாம். வரும் ஏப்ரலில் கொடைக்காணலில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.