ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ்ப் படம் படத்தில் ஓமஹசீயா என்று பாடி ஆடிய திஷா பாண்டே, அச்சமின்றி எனும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஷாஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஐ.பாதுஷா தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ராஜேஷ் கே.வாசு. இவர் பல தமிழ், மலையாள படங்களில் துணை, இணை இயக்குநராக பணியாற்றியவர். ஹீரோவாக புதுமுகம் விநாயகம் அறிமுகமாக, திஷா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக பெங்களூர் அழகி ஒருவர் அறிமுகமாகிறார்.
புதியவர் சஜிராம் இசையமைக்கிறார். பி.கே.ராஜா வசனம் எழுத, மணி பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். அச்சமின்றி படம் குறித்து டைரக்டர் ராஜேஷ் கே.வாசு கூறுகையில், "அதிகம் படித்து அதிகாரிகளாக வலம் வரும் சிலர், நாகரீகம் என்கிற பெயரில் நம் கலாச்சாரத்தை மறந்து கடமை தவறுவதால் அவர்களும் பாதிப்படைவதோடு, அவர்களின் நல்ல குடும்பத்தின் எதிர்காலம் வழி தவறிப் போகிறது. இதுதான் இந்தப் படத்தின் கரு. மக்களிடம் இருந்தே இந்தக் கதையை எடுத்திருக்கிறேன். படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பக்கத்து வீட்டில் நடந்த சம்பவங்கள் போல, பார்த்த காட்சிகள் போல, படித்த செய்திகள் போல உணர்வார்கள்,"என்றார்.