விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
கேரளத்தில் இருந்து தற்போது இறக்குமதியாகியிருக்கும் இன்னொரு நடிகை அருந்ததி நாயர். இவர் தற்போது திரைககு வந்துள்ள பொங்கி எழு மனோகரா படத்தில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். இதையடுத்தும் இரண்டு படங்களில் கமிட்டாகியிருப்பதாக சொல்லும் அருந்ததி நாயர். இந்த நிலையில், சமீபத்தில் அவரை படங்களுக்கு புக் பண்ணுவதற்காக சில டைரக்டர்கள் கேரளத்தில் இருக்கும் அருந்ததி நாயரை தொடர்பு கொண்டார்களாம். அப்போது, என்னைப்பொறுத்தவரை, சின்ன ஹீரோ பெரிய ஹீரோ என்ற பாகுபாடு எதுவும கிடையாது. எனக்குரிய கேரக்டருக்குத்தான் முதலிடம் கொடுப்பேன்.
அதோடு, நான் சில மாடர்ன் போட்டோக்களை வெளியிடடிருந்தாலும் கிளாமர் விசயத்தில் யாரையும் பின்பற்றோ, ஓவர்டேக் செய்யவோ திட்டமிடவில்லை. கதாபாத்திரங்களுக்கு கிளாமர் அவசியம் என்றால் மிதமான கிளாமரை மட்டுமே வெளிப்படுத்துவேன். காரணம், எனது முகம் ஹோம்லியானது. நான் அளவுக்கதிகமாக கிளாமர் காட்டினால் அது ரசிக்காது. எனது இமேஜ் மட்டுமின்றி, எனது அழகையும் கெடுத்து விடும். அதனால், சினிமாவில் நடிக்கிற காலம்வரை கவர்ச்சியைப்பொறுத்தவரை லிமிட் தாண்டாமல் நடிப்பேன் என்று கூறி விட்டாராம்.