ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சூப்பர் குட் நிறுவனத்தில் மானேஜராக பணியாற்றியவர் செந்தில் கணேஷ். இவர் வைத்தீஸ்வரன், வெடிகுண்டு முருகேசன் என பல படங்கள் தயாரித்தார். தற்போது ஜீவா நடிக்க ஒருபடம் தயாரித்து வருகிறார். தலைப்பு முடிவாகவில்லை. ராம்நாத் படத்தை இயக்குகிறார். ஆனால் படபிடிப்பு இன்னும தொடங்கவில்லை. காரணம் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டு தற்போது மழுப்பி வருகிறாராம் நயன்தாரா. நயன் மறுத்துவிட்டால் ஸ்கிரிப்டை மாற்ற வேண்டிய நிலை உருவாகிவிடும் என்கிறார் இயக்குநர். நயனுக்காகவே உருகி உருகி உருவாக்கப்பட்ட ஸ்கிரிப்ட் இதை மாற்றமுடியாது என்று இயக்குநர் நாயகனிடம் கூறிவிட்டாராம். அதனால் ஜீவா மற்றும் நயனுக்கு நெறுக்கமான ஹீரோக்கள் மூலம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.