ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மெகாஸ்டார் மம்முட்டியின் மகன் என்பதையும் தாண்டி இப்போது மலையாளத்தில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான். வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்தாலும், அவருக்கு தமிழில் கிடைத்த அறிமுகம் சரியாக அமையவில்லை என்கிற வருத்தம் சிலமாதங்கள் முன்பு வரை இருந்தது உண்மைதான்.. ஆனால், லேட்டானாலும் லேட்டஸ்டாக மோதிரக்கையால் குட்டுப்படுவதுபோல மணிரத்னம் இயக்கத்தில் தற்போது அவர் நடித்து வரும் 'ஓகே கண்மணி' படம் அந்த குறையை போக்கும் விதமாக அமைந்துவிட்டது..
மணிரத்னம் படம் தான் என்றாலும் இந்தப்படம் ரிலீஸ் சமயத்தில் மிகப்பெரிய போட்டியை சந்திக்கும் என்றே தெரிகிறது. இந்தப்படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.. ஆனால் அந்த சமயத்தில் தான் கமலின் 'உத்தம வில்லன்', விக்ரமின் 'பத்து எண்றதுக்குள்ள', கார்த்தியின் 'கொம்பன்', ஆர்யாவின் 'புறம்போக்கு', ஜெயம் ரவியின் 'ரோமியோ-ஜூலியட்' மற்றும் லாரன்சின் 'முனி-3' ஆகிய படங்களும் ரிலீசாக இருக்கின்றனவாம்.. மணிரத்னம் உதவியால் போட்டிக்கடலில் குதித்து, துல்கர் கரை சேர்வாரா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.