ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கூத்துப்பட்டறையில் கணக்காளராக வேலை செய்து வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு குறும் படத்தில் நடித்தவர் விஜய்சேதுபதி அந்த தொடரில் அவரது நடிப்பு பிரமாதமாக இருந்ததாக சுற்றி நின்றவர்கள் அவரை உற்சாகப்படுத்தி விட, பின்னர் பல குறும் படங்களில் நடித்து இன்றைக்கு கோடம்பாக்கத்தின் முக்கிய ஹீரோக்களில் தானும் ஒருவராகி விட்டார்.
அதனால், ஆரம்பத்தில் தன்னை வைத்து குறும்படங்களை இயக்கியவர்களுக்கே கால்சீட் கொடுத்து நடித்து வந்த அவர், இப்போது முன்னணி டைரக்டர்களின் படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். முக்கியமாக, எந்த டைரக்டராக இருந்தாலும் அவர்கள் சொல்லும் கதையில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், நான் சினிமாவில் டிரண்டை மாற்றினேனா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ரசிகர்கள் என்னை டிரண்ட் செட்டர் என்கிறார்கள். அதோடு, விஜய்சேதுபதி நடித்தால் வித்தியாசமான படமாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்து கொண்டே தியேட்டருக்கும் வருகிறார்கள். அதனால், அவர்களை ஏமாற்றாமல், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமான கதைகளில் நடிப்பதோடு, ரசிகர்களின் ரசனைக்கு நல்ல தீனி போடக்கூடிய படங்களாக கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால்தான், இதுவரை நண்பர்களுக்காக பட்ங்களை ஒத்துக்கொண்டு நடித்த நான், இப்போது கதைகளுக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கிறேன் என்கிறார் விஜய்சேதுபதி.