ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சென்னை செம்பியத்தை சேர்ந்த கோ.தேவராஜன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற நடிகர்கள் நடித்த படங்கள் வெளிவரும்போது நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 காட்சிகள் வரை நடத்துகிறார்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக வசூலிக்கிறார்கள்.
இதுகுறித்து ஏற்கெனவே நான் கொடுத்த புகார் மீது புலன் விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர். எனவே இந்த முறைகேட்டை கண்டுபிடிக்க சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நேற்று (ஜன 27) விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வருகிற 30ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.