ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கொம்பன் படத்தையடுத்து காஷ்மோரா படவேலைகளில் இறங்கி விட்டார் பருத்தி வீரன் கார்த்தி. இந்த நிலையில் மெட்ராஸ் படத்தின் ஹிட்டுக்குப்பிறகு அவரை வைத்து படம் இயக்க புது வரவு டைரக்டர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் அவரை தற்போது ஓரிரு படங்கள் இயக்கியவர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். அதனால் அவரது கதை இலாகா கதை கேட்பதில் முன்பைவிட தீவிரமடைந்துள்ளது.
அப்படி செல்பவர்களிடம் வழக்கம்போல் முதலில் கார்த்தி கதை கேட்பதில்லை. கதை கேட்பதற்கென்றே அவர் வைத்திருக்கும் கதை இலாகாதான் கதை கேட்கிறார்கள். அப்படி அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கதை வீதம் கேட்கிறார்களாம். ஒரேநாளில் பல கதைகள் கேட்டால் சரியான முடிவு எடுக்க முடியாது என்பதால் இதை பின்பற்றுகிறார்களாம். இவர்கள் ஓகே என்று தேர்வு செய்யும் கதையை கடைசியில் அனைவரும் உட்கார்ந்து ஒருமுறை கேட்கிறார்களாம். அப்போதும் அது திருப்தியாக இருக்கும்பட்சத்தில் அந்த கதையை டிக் அடித்து கார்த்தி பாசறைக்குள் அனுப்பி வைக்கிறார்களாம்.