சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
லிங்கா படத்தை வாங்கி வெளியிட்டதில் 40 கோடி நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி சில விநியோகஸ்தர்கள் கடந்த 10ந் தேதி உண்ணாவிரதம் இருந்தார்கள். படத்தை பற்றி தவறான செய்திகளை விநியோகஸ்தர்களே பரப்பி படத்தின் வசூலை கெடுத்து விட்டதால் நஷ்டஈடு தரமுடியாது என்று தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்துவிட்டார்.
இதனால் மீண்டும் வருகிற 27ந் தேதி உண்ணாவிரபோராட்டம் நடத்த லிங்கா விநியோகஸ்தர்கள் போலீசிடம் அனுமதி கேட்டனர். போலீசார் அனுமதி மறுக்கவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று (ஜன 23) விசாரணைக்கு வந்தது. "ஏற்கெனவே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தனர் அப்போது அனுமதி கொடுக்கப்பட்டது. இப்போது மீண்டும் கேட்கிறார்கள். எனவேதான் மறுக்கப்பட்டது" என்று போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.