ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
“நான் பாடல் ஆசிரியர் எல்லாம் கிடையாது. சில நேரம் சில விஷயங்கள் நமக்கே தெரியாம நடந்து விடும். அப்படிப்பட்டதுதான் என்னை அறிந்தால் படத்தில் கிடைத்த வாய்ப்பு” என்று இன்ப அதிர்ச்சியை நினைவு கூர்ந்து தொடங்கினார் விக்னேஷ் சிவன். “கௌதம் சார்கிட்ட உதவி இயக்குனரா வேலை செய்யணும்னு பல நாள் ஏங்குனது உண்டு. அது இந்த பாட்டு எழுதுனது மூலம் அது நிறைவேறியுள்ளது.”
“ இப்பவும் எனக்கு இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று புரியவில்லை எல்லாம் கடவுளின் செயல். கௌதம் சார் பாட்டு எழுத சொன்னவுடன் தலை-கால் புரியல, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவுட்-லைன் எழுதி கொடுத்துட்டேன். பின்னர், ஹாரிஸ் சார் மெட்டுக்கு ஏற்றார்போல் சில வார்த்தைகளை சேர்த்து, மாற்றி பாடல் பதிவு செய்யப்பட்டது.”
“ கௌதம் சாரின் படத்தில் பாட்டு கதையை நகர்த்தி செல்லும். இப்பாட்டு ஒரு குத்து பாடல் மட்டும் கிடையாது. கதையின் முக்கியமான கதாபாத்திரங்களை பற்றி எடுத்துரைக்கும் வகையில் அமைத்திருக்கும். பாட்டு எழுதப்படுவது தல அஜீத் சாருக்கு என்பதாலோ என்னவோ எனக்கு பாட்டு Positive ஆக வந்தது. அதனாலேயே “எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்” என்று ஆரம்பிதேன்.
"நானும் ஒரு இயக்குனர் என்பதை தாண்டி தல ரசிகர்கள் இடையே எனக்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பு என்னை உற்சாகமூட்டுகிறது. ”
" எனக்கு வாய்ப்பளித்த கௌதம் சார், ஹாரிஸ் சார் மற்றும் தயாரிப்பாளர் AM ரத்னம் சார் அனைவருக்கும் நன்றி. எனக்கு வந்த வார்த்தைகள் வைத்து பாட்டு எழுதி இருந்தேன் அதை ஏற்றுகொண்ட ரசிகர்களுக்கு எனது நன்றிகள்” என்று நெகிழ்ந்து கூறினார் விக்னேஷ் சிவன்.