ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி ஆகிய இரு இந்திய மொழிகளில் இசையமைத்துக் கொண்டும், சில ஹாலிவுட் படங்களுக்கும், இசையமைத்து வருகிறார். தமிழில், மணிரத்னம் இயக்கும் 'ஓகே கண்மணி', இந்தியில் 'சாத் இந்துஸ்தானி, தமாஷா, மொகஞ்சதாரோ,” ஆகிய படங்களுக்கும், ஆங்கிலத்தில் 'பீலே', அராபிய, ஆங்கில மொழியில் தயாராகும் 'முகம்மது' ஆகிய படங்களுக்கும் இசையமைக்கிறார்.
மாதத்தில் பாதி நாட்கள் இந்தியாவிலும், பாதி நாட்கள் அமெரிக்காவிலும் என பறந்து கொண்டேயிருக்கிறார். விமானப் பயணத்தின் போது கூட ரகுமான், கிடைக்கும் நீண்ட நேரத்தில் அவருடைய இசை வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார். ஒரு லேப் டாப், குட்டி ஆடியோ மிக்ஸர், ஹெட் போன் என சின்னச் சின்ன வசதிகளுடனும் அவர் தனது வேலையை செய்து கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.
“ஒரு நீண்ட பயணத்தின் போது, மிக உயரத்தில் என்னுடைய மிகச் சிறிய ஸ்டுடியோவின் புகைப்படம்', என பதிவு செய்து அந்த புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.