ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாளத் திரையுலகத்தைச் சேர்ந்த மியா ஜார்ஜ், 'அமர காவியம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அங்கு சுமார் பத்து படங்களுக்கும் மேல் நடித்த அனுபவம் அவருக்கு உண்டு. அவர் நாயகியாக நடித்துள்ள 'கசின்ஸ்' என்ற திரைப்படம் இன்று வெளியாகிறது. தமிழில் தற்போது 'இன்று நேற்று நாளை' என்ற படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்து வருகிறார்.
'அமர காவியம்' படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் இரண்டாவது படம் இது. அறிமுகமான முதல் படத்திலேலேய அழகான, திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர் அதிகப் படங்களில் நடிக்காமல் இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். மலையாள நடிகைகளுக்குத்தான் இங்கு அதிக வரவேற்பு உள்ளதே அப்புறம் ஏன் அவர் அதிகப் படங்களில் நடிக்காமல் இருக்கிறார் என்று கேட்டால் நம்மிடம் ஒரு தகவலை வெளிப்படையாகச் சொன்னார்.
“எனக்கு இயக்குனர் யார், நாயகர் யார் என்று பார்த்து பார்த்து நடிப்பது முக்கியமில்லை. அவருடன் நடிக்க வேண்டும், இவருடன் நடிக்க வேண்டும், பெரிய இயக்குனர்களின் இயக்கத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றெல்லாம் பார்க்க மாட்டேன். எனக்கு என் கதாபாத்திரம்தான் முக்கியம். ஒரு நல்ல கதாபாத்திரம் என்னைத் தேடி வரும் போது அதில் கண்டிப்பாக நடிப்பேன். எந்த ஒரு ஆசையுடனும், கனவுடனும் தமிழ்த் திரையுலகத்திற்கு வரவில்லை. நல்ல கதாபாத்திரங்களில் நடித்து, நல்ல நடிகை எனப் பெயர் வாங்கினாலே போதும்,” என்கிறார். அஜித், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை, ரஜினியுடன் ஜோடியாக நடிக்க ஆசை என மற்றவர்கள் பேசுவதைப் போல பேச மாட்டேன்கிறாரே....