Advertisement

சிறப்புச்செய்திகள்

இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதைத்திருட்டு வழக்கு : கே.எஸ்.ரவிக்குமார் பதில்

08 டிச, 2014 - 17:50 IST
எழுத்தின் அளவு:

லிங்கா படத்தின் கதை தன்னுடையது என்று தற்போது இரண்டாவதாக ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை, இன்று (டிசம்பர் 08ம் தேதி) நடைபெற்றது. பின், இவ்வழக்கின் விசாரணையை, வரும் 10ம் தேதிக்கு கோர்ட் ஒத்திவைத்துள்ளது. இந்த கதைத்திருட்டு வழக்கு விவகாரம் குறித்து, லிங்கா பட இயக்குனர், கே.எஸ்.ரவிக்குமார் வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.


அதில் அவர் கூறியுள்ளதாவது, 'சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு வரணும் சார். நாங்க எடுக்குற கதை என்னன்னே தெரியாம கேஸ் போடுறாங்க. உஙக 'வில்லன்' கதையும் அமீர்கான் நடிச்சிருக்கும் 'தூம்3' கதையும் ஒண்ணுதான்'னு மும்பையில் இருந்து ஒருத்தர் போன் பண்ணார். ரெண்டு கதையின் கருவும் ஒன்றுபோல இருந்தது. ஆனா என் படத்தின் சீன் ஒன்றுகூட அமீர்கான் படத்தில் இல்லை. கரு என்னுடையதுனு நான் என்ன கேஸா போட்டேன்? என் படம் 'புத்தம்புது பயணம்', பாலசந்தர் சாரின் 'வானமே எல்லை'யும் ஒரே கதைக் கருதான். ஒண்ணுல ப்ளட் கேன்சர் வந்து ஹீரோ சாகிறான். இன்னொண்ணுல ஹீரோ தற்கொலை பண்ணிக்கிட்டு சாகுறான். அதற்காக கேஸ் போட்டோமா? ஒரே 'தாட்ஸ்' ரெண்டு பேருக்கும் உருவாகலாம். அதில் தப்பில்லை. சினிமாவை பொறுத்தவரை திரைக்கதை தான் மெயின். அது ஒண்ணுபோல இருந்தா கேஸ் போடு. என்னோட 'தசாவதாரம்' படத்துக்கும் இதே பிரச்னை எழுந்தது. கேஸ் சுப்ரீம் கோர்ட் வரை போனது. கடைசியில் ரெண்டுக்கும் சம்பந்தமே இல்லைனு தீர்ப்பு கிடைச்சது. இந்த கேஸ் முடியுற வரைக்கும் வெட்டியா அலைஞ்சோமே? தேவையில்லாத டென்ஷனை தலையில் சுமந்தோமே? அதற்கு நான் யாரிடம் நியாயம் கேட்பது? என் படம் 'மின்சார கண்ணா'வையும் 'எதிரி'யையும் கலந்து தெலுங்குல ஒரு படத்தையே ஒருத்தர் எடுத்துவிட்டார். அவரே என்கிட்ட வந்து ஒரு கதையையும் சொன்னார். அப்பகூட நான் அவரிடம் என் கதை பிரச்னைபற்றி கேட்கவேயில்லை. என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in