ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களில் அந்த 7 நாட்கள் படமும் முக்கியமானது. அநத படத்தில் பாலக்காட்டு மாதவன் என்ற வேடத்தில் அவர் நடிததிருந்தார். தோளில் ஒரு ஆர்மோனியப்பெட்டியை தொங்க விட்டபடி, இசையமைப்பாளர் ஆக முய்றசி செய்பவராக நடித்தார். அவருக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருந்தார்.
கதைப்படி அப்படத்தில் பாக்யராஜின் காதலியான அம்பிகாவை, அப்படத்தில் டாக்டராக நடித்திருந்த ராஜேசுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால், முதலிரவு அறையில், தனது காதல் கதையை அவரிடம் அம்பிகா சொன்னதையடுத்து, அவரை காதலனுடனேயே இணைத்து வைக்க ராஜேஷ் முயற்சி எடுப்பார்.
இதில் ராஜேஷ் நடித்த வேடத்தில் நடிக்க முதலில் நடிகர் சிவகுமாரைத்தான் பாக்யராஜ் தொடர்பு கொண்டாராம். ஆனால், பாக்யராஜே அந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதால் தனக்கான வேடத்தை டம்மி பண்ணி விடுவார் என்று அப்போது நடிக்க மறுத்து விட்டாராம் சிவகுமார். ஆனால், அந்த 7 நாட்கள் படம் திரைக்கு வந்தபோது, ஒரு நல்ல வேடத்தை இழந்து விட்டேனே என்று ரொம்பவே பீல் பண்ணினாராம் சிவகுமார்.