மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
இனியா, ஓவியா என்ற இரண்டு நடிகைகளுமே கேரளாவைச்சேர்ந்தவர்கள். அதோடு, சினிமாவில் அவர்கள் நடிகைகளாகும் முன்புவரை கலை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தவர்களாம். சினிமா பாடல்கள் மட்டுமின்றி, குச்சிப்புடி உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளும் நடத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் நடிக்க வந்த பிறகு அவர்களுக்கு மீண்டும் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டவில்லையாம்.
ஆனால், இப்போது இனியாவுக்கு எதிர்பார்த்தபடி சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால், மீண்டும் கலை நிகழ்சசிகளை ஆரம்பித்திருக்கிறாராம். அதில் தன்னுடன் நடனமாட ஓவியாவுக்கு அழைப்பு விடுத்தபோது, முதலில் தயங்கியவர் பின்னர் சம்மதம் சொலலி விட்டாராம். அதனால் தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கலை நிகழச்சி இருந்தால் கேரளா சென்று செம ஆட்டம் போடுகிறாராம் ஓவியா. தற்போது இவர்கள் இரண்டு பேருமே சினிமா நடிகைகள் என்பதால் முன்பு அவர்கள் ஆட்டத்துக்கு இருந்ததை விட இப்போது கிரேஸ் அதிமாகி விட்டதாம். அதனால் நிகழ்ச்சிக்கான தொகையை பன்மடங்கு உயர்த்தி விட்டுள்ளார்களாம்.