மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகை ஸ்ருதிஹாசனைப் பற்றி ஆந்திர மீடியாக்களில் கடந்த சில வாரங்களாகவே ஒரு பரபரப்பான வதந்தி சுற்றிக் கொண்டிருந்தது. அவர் தற்போது மகேஷ் பாபு ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்திலும், விஜய் ஜோடியாக ஒரு தமிழ்ப் படத்திலும் மற்றும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். மகேஷ் பாபு படமும், விஜய் படமும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகின. ஆனால், ஸ்ருதிஹாசன், விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்குப் படத்திலிருந்து விலகிவிட்டார் என பலர் செய்திகளை வெளியிட்டு வந்தனர். அது பற்றி ஸ்ருதிஹாசனும் கண்டுகொள்ளாததால் அந்த செய்தியும் உண்மையோ என்று பலரும் நினைக்கத் தொடங்கிவிட்டனர்.
இதனிடையே, மகேஷ் பாபு - ஸ்ருதிஹசான் நடிக்கும் தெலுங்குப் படத்தின் இயக்குனரான கொராட்டாலா சிவா அந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “ஸ்ருதிஹசான் எங்களது படத்தில் நடித்து வருகிறார். அவர் ஏற்கெனவே ஒரு ஷெட்யூலை முடித்து விட்டார். மீண்டும் டிசம்பர் 10ம் தேதி முதல் நடிக்கவிருக்கிறார். அப்படியிருக்க அவர் எங்களது படத்தில் நடிக்கவில்லை என்ற வதந்தி எங்கிருந்து வந்தது, ” என்று கேட்டிருக்கிறார். ஸ்ருதிஹாசன், விஜய் படத்தில் ஜோடியாக நடிக்க ஆரம்பித்தத்தை பிடிக்காத யாரோதான் அப்படி ஒரு கதையை கிளப்பி விட்டிருக்கிறார்களோ...?