ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வெங்கட் பிரபு - சூர்யா முதன் முறையாக இணைந்துள்ள 'மாஸ்' படத்தில் நாயகியாக நயன்தாரா மட்டுமே தற்போது நடித்து வருகிறார். படத்தில் உள்ள இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரத்தில் முதலில் 'ஐ' பட நாயகி எமி ஜாக்சன் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று விலகியதால் அவருக்குப் பதிலாக, கார்த்தி நடித்த 'சகுனி' படத்தின் ஹீரோயினான பிரணீதா நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை அது பற்றிய எந்தவிதமான அறிவிப்பையும் படக் குழுவினர் வெளியிடவில்லை.
எமி ஜாக்சன் முதலில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தாராம். அப்போது அவரிடம் 25 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்கப்பட்டதாம். அதன் பின் திடீரென வெறும் 15 நாட்கள் மட்டும் போதும் என்றார்களாம். அவ்வளவு குறைவான நாட்கள் மட்டுமே நடித்தால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கும் என்பது தெரியாததால் படத்திலிருந்து எமி ஜாக்சன் விலகினார் என்கிறார்கள்.
தமிழில் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பிரணீதா சூர்யாவுடன் ஜோடி என்றதும் நடிக்க சம்மதித்து விட்டார் என்கிறார்கள். ஏற்கெனவே தமிழில் நடித்த 'சகுனி' மாபெரும் தோல்விப் படமாக அமைந்துவிட்டதால் 'மாஸ்' படத்தில் நடித்தால் மீண்டும் முன்னணி நாயகியாக ஆக முயற்சிக்கலாம் என அவர் நினைக்கிறாராம். இருந்தாலும் இவையனைத்துமே தகவல்களாகவே உலவிக் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு நயன்தாரா தவிர வேறு எந்த நடிகை அடுத்த ஹீரோயினாக நடிக்கிறார்கள் என்பதைப் பற்றி இயக்குனர் வெங்கட் பிரபு கூட எதுவும் சொல்லாமலே இருக்கிறார். சாதாரணமாகவே டிவிட்டரில் எதையாவது பதிவிட்டுக் கொண்டேயிருப்பவர், அவரது படம் பற்றிய தகவல்களை கவனமாகத் தவிர்க்கிறார் என்கிறார்கள்.