ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நான் ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கன்னட நடிகர் -சுதீப். அங்கு அவர் ஆக்ஷன் ஹீரோ. தமிழில் ஹிட்டாகும் படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்து நடிப்பார். நான் ஈ படத்திற்கு பிறகு அவர் கன்னடத்தில் நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இது தமிழ் தவிர கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் படமாகும் திகில் படம். இந்தப் படம் பிப்ரவரியில் தொடங்குகிறது.
"நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்ற பல வருடங்களுக்கு முன்பே கே.எஸ்.ரவிகுமார் சார் கூறியிருந்தார். அதற்கான காலம் இப்போது கனிந்திருக்கிறது. அருமையான கதையை என்னிடம் சொல்லியிருக்கிறார். அதனை விரைவில் தொடங்குகிறோம். லிங்கா படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாகிவிடுவேன்" என்கிறார் சுதீப்.