ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வில்லன் நடிகர் ஆனந்தராஜ் நேற்று (நவ 10) தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் அவர் கூறியதாவது: பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்து நடிப்பு ஆசையில் சென்னை வந்தேன். நடிப்பு கல்லூரியில் படித்து முடித்து விட்டு சினிமா வாய்ப்பு தேடினேன். ஒருவர் வாழும் ஆலயம், உரிமை கீதம் படங்களில் துணை வில்லனாக நடித்தேன்.
என் தங்கச்சி படிச்சவ படத்தில் வில்லனாக நடித்து பாப்புலர் ஆனேன். தென்னிந்திய மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் என்றைக்குமே வில்லனாக நடிப்பதில்தான் சுகம். ரசிகர் மன்றம் வைக்க மாட்டார்கள். விழாக்களுக்கு கூப்பிட மாட்டார்கள். நடித்தோமா ஜாலியாக இருந்தோமா என இருக்கலாம். எனது குடும்பத்தினருக்கும் நான் வில்லனாக நடிப்பதுதான் பிடிக்கும்.
முதன் முதலாக இந்திப் படத்தில் நடிக்கிறேன். பிரபுதேவாவை ஒரு டான்சராக இருந்த காலத்திலிருந்து தெரியும். அவருடன் நடித்திருக்கிறேன். அவரது இயக்கத்தில் நடித்தும் இருக்கிறேன். ஆக்ஷன் ஜாக்ஷன் படத்தில் வில்லன் கேரக்டருக்கு நான் பொறுத்தமாக இருப்பேன் என்பதை உணர்ந்து என்னை நடிக்க அழைத்தார். வில்லன்களுக்கே உரிய அதட்டல் மிரட்டல் இல்லாமல் இயல்பாக நடித்தால் போதும் என்று அவர் சொன்னார். அதையே செய்திருக்கிறேன்.
பாலிவுட்டில் எனக்கு கிடைத்திருக்கும் நண்பர் அஜய் தேவ்கான். பாங்காக்கில் சண்டை காட்சி எடுத்தபோது நான் விபத்துக்குள்ளாகி பலத்த காயம் அடைந்தேன். காயத்துடன் நடிக்க நான் முன்வந்தும் அஜய்தேவ்கான் நன்றாக ரெஸ்ட் எடுத்து வரும்படி அனுப்பி வைத்தார். நான் வரும் வரை காத்திருந்தார். அவரைப்போல எளிமையான ஹீரோவை நான் பார்த்ததில்லை. அடுத்து இந்தியில் எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமா கிடைக்காதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஆக்ஷன் ஜாக்சன் என் வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். என்றார் ஆனந்தராஜ்.