ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாணா காத்தாடி படத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதன்பிறகு தமிழ், தெலுங்கு என்று இதுவரை 25 படங்களில் நடித்து விட்டார். ஆனபோதும், தமிழில் அவர் நடித்த அஞ்சான், கத்தி படங்களுக்குத்தான் ரசிகர்கள் மத்தியில் இருந்து அதிகப்படியான விமர்சனங்கள் வந்துள்ளதாம். காரணம், தெலுங்கில் நடித்த படங்களைப் பொறுத்தவரை குறைவான வசன காட்சிகளில, அதிகமான பாடல் காட்சிகள் என்றுதான் நடித்திருக்கிறாராம். அதனால் அவரது நடனத்திற்கு மட்டுமே ரசிகர்கள் லைக் கொடுத்து வந்திருக்கிறார்கள்.
ஆனால், தமிழில் நடித்த படங்களில் அவருக்கு கூடுதலான வசன காட்சிகளும் கொடுக்கப்பட்டதால் பெருவாரியான ரசிகர்கள் சமந்தாவின் நடிப்பு குறித்து உச் கொட்டி வருகிறார்களாம். அந்த வகையில், அஞ்சான் வெற்றி பெறாதபோதும் சமந்தாவின் பிகினி கலந்த நடிப்புக்கு இளவட்ட ரசிகர்கள் ஏகப்பட்ட மார்க் கொடுத்து வருகிறார்களாம்.
அதிலும் விஜய்யுடன் நடித்துள்ள கத்தி படத்தில் அவரது நடிப்பையும், விஜயுடனான ஜோடிப் பொருத்தத்தையும் பெருமையாக சொல்லி கொண்டாடுகிறார்களாம். அந்த வகையில், சமந்தாவின் இணையதள பக்கத்திற்குள் செல்லும் விஜய் ரசிகர்கள், இந்த ஒரு படத்தோடு நிறுத்திக் கொள்ளக்கூடாது. எங்கள் தளபதியுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் சொல்லி சமந்தாவை உசுப்பேற்றி விடுகிறார்களாம். அதனால் விஜய் நடிக்கும் மாரீசன் படத்துக்கு ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோரும், அட்லி இயக்கும் படத்திற்கு நயன்தாராவும் கமிட்டாகி விட்ட நிலையில், அதற்கடுத்து சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிப்பதற்கான முயற்சியை இப்போதே முடுக்கி விட்டிருக்கிறாராம் சமந்தா.