ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஐதராபாத்தில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டவர் நடிகை ஸ்வேதா பாசு. இந்திப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பின்னர் கதாநாயகியாகவும் நடித்தார். தமிழில் ரா ரா, சந்தமாமா ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் பணத்தேவைக்காக விபச்சாரம செய்யத் தொடங்கியிருக்கிறார் ஸ்வேதா பாசு.
இந்த நிலையில்தான் ஐதராபாத்தில் போலீசார் நடத்திய ரெய்டில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார் ஸ்வேதா பாசு. அதையடுத்து அவரிடம் நடந்த விசாரணையில், சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் குடும்ப செலவுக்காக விபச்சாரம் செய்ததாக சொன்னார். அதோடு தனது குடும்பத்தாரே தன்னை பணத்துக்காக இப்படி விபச்சாரம் செய்ய கட்டாயப்படுத்துவதாகவும் புகார் கூறினார்.
அதனால், அவரை பெண்கள் காப்பகத்தில் வைத்து கவுன்சிலிங் கொடுக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது. அதனால் சில மாதங்களாக பெண்கள் காப்பகத்தில்தான் இருக்கிறார் ஸ்வேதாபாசு. இந்த நிலையில், அவருக்கு சினிமாவில் சான்ஸ் கொடுக்கவும இரண்டு இந்திப்பட டைரக்டர்கள் முன்வந்துள்ளனர். அதோடு, ஸ்வேதா பாசுவை வெளியில் கொண்டு வர அவரது தாயாரும் கோர்ட்டில மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த நிலையில், மீண்டும் தனது பெற்றோரிடம் செல்ல விருப்பமில்லை என்று தெரிவித்துள்ள ஸ்வேதாபாசு, தொடர்ந்து சினிமாவில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளாராம். அதனால் அவரது வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும்போது, இதுபற்றி கோர்ட் முடிவெடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.