ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கும்கி படத்தை அடுத்து பிரபு சாலமன் இயக்கி வரும் படம் கயல். இப்படத்தில் நடிக்கும் அனைவரும் புதுமுகமே. படம் பற்றி இயக்குனர் சொல்லும் போது, ''இந்த படம் லவ் கதை தான். படம் முழுக்க பயணம் இருக்கும், 2004-ல் கதை தொடங்குகிறது. படத்தின் கிளைமாக்ஸ் 2014 இல் முடிகிறது. இப்படம் தமிழகத்தை புரட்டி போட்ட சுனாமியை நினைஊட்டும். ஹீரோவும் அவன் நண்பனும் வெள்ளந்தியானவர், வாழ்க்கையில் எந்த ஒரு இலக்கும் இல்லாத இவர்கள் பறவை போல் வாழ்ந்து பழக்கப்பட்ட இளைஞர்கள். இவர்கள் சந்திக்கும் விஷயங்கள் தான் இந்த படம்.
படத்தில் ஜிகினா வேலைகள் இல்லை, உண்மையான நீர் தேக்கங்களிலும், நீர் நிலைகளிலும் படம் எடுத்து உள்ளோம். காலை ஷூட்டிங் தொடங்கினால் கிட்டத்தட்ட ஷூட்டிங் முடித்து உடல் முழுக்க ஊறிப்போய் தான் வெளியே வருவோம். அந்த அளவிற்கு படம் இருக்கும். கன்னியாகுமரி உட்பட பல இடங்களில் படம் பிடித்துள்ளோம், முடிந்த வரை என் ஒவ்வொரு படத்திலும் ஒரு முக்கியமான வாழ்க்கையை பதிவு செய்ய விரும்புகிறேன். கயல் படத்திலும் அதை தான் செய்துள்ளேன். நவம்பர் 8-ல் இசை வெளியீடு நடத்த திட்டமிட்டுள்ளோம். டிசம்பரில் படத்தை வெளியிட எண்ணியுள்ளோம் என்கிறார் பிரபுசாலமன்.