அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' |
விஜய்யுடன் போக்கிரி, காவலன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அசின். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கியபோது, ஒரு படப்பிடிப்புக்காக இலங்கை சென்றார். ஆனால் அதை தமிழ்நாட்டிலுள்ள சில அமைப்புகள் எதிர்த்தன. அதற்கு, இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை செல்லும் நான், இப்போது இந்தி நடிகைதான். அதனால் தமிழ்நாட்டு சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பாட வேண்டிய அவசியமில்லை என்றும் தில்லாக பேட்டி கொடுத்தார்.
இதனால் டென்சனாகிப்போன தமிழ் ஆர்வலர்கள், இனிமேல் அசினை எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஓங்கி குரல் கொடுத்தனர். அதனால்தான் இந்தியில் மார்க்கெட் இறங்கியபோது தமிழில் நடிக்க அசின் முயற்சி எடுத்தபோது எந்த இயக்குனர்களும் அதற்கு செவிசாய்க்கவில்லை. இவருக்கு சான்ஸ் கொடுத்தால் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்று கண்டுகொள்ளாமல் இருந்தனர்.
இந்தநிலையில், விஜய்யின் கத்தி படத்தை ராஜபக்சேவுக்கு ஆதரவான லைகா நிறுவனம் தயாரித்திருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் அமைப்புகள் கொடி பிடித்து வந்ததால், அதற்கு எதிராக தனது குரல் கொடுத்துள்ளார் அசின். அதாவது சினிமா வேறு, அரசியல் வேறு, அதனால் சினிமாவுக்கு எதிராக அரசியல்வாதிகள் குரல் கொடுப்பது முறையல்ல என்று கூறியிருப்பவர், இப்படி விஜய் படத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்கு முன்பு கத்தி படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கி அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார் அசின்.